கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ்.
அத்து கட்டு நல சங்கம் கலந்தாய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்துக்கட்டு நல சங்கம் கலந்தாய் கூட்டம் கிருஷ்ணமூர்த்தி தலைவர் தலைமையில் நடைபெற்றது அதேபோல இந்த கூட்டத்தில் பிரசன்னாகுமார் பொருளாளர் வரவேற்புரை ஆற்றி பேசினார் கூட்டத்தில் திர்மணங்கள் நிறைவேற்றப்பட்டது
1) அத்துக்கட்டு பண்டிகையில் காளைகள் விடும் போது பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று தீர்மானங்கள் முதலிலேயே நிறைவேற்றப்பட்டிருந்தது அதன் தொடர்ச்சியாக தாசனபுரம் அத்துக்கட்டி பண்டிகையின் போது காளை உரிமையாளர்கள் யாரும் பட்டாசு வெடிக்க வில்லை ஆதலால் சங்கத்தின் சார்பாக காளை உரிமையாளர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்
2) அத்துக் கட்டு பண்டிகையின் போது காளைகளை டெம்போ போன்ற வாகனங்களில் ஏற்றி வந்து தெருவில் விடக்கூடாது என்று சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3) அதேபோல அத்துக்கட்டு பண்டிகையின் போது மாடு பிடி வீரர்கள் காளைகளின் புர்கா துணிகளைப் பிடித்து களைப் பிடிக்கக் கூடாது காளைகளை வளைவில் பிடிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட தூரத்திலேயே காளைகளை மாடு பிடி வீரர்கள் காளைகளை பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஏராளமான காளையின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் Thil TV செந்தில்முருகன் நன்றியுரை ஆற்றினார்.