திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மாவட்ட பார்வையிழப்புத் தடுப்பு சங்க உதவியுடன், திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திண்டுக்கல் புனித மரியன்னை ஆரம்பப்பள்ளியில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் திண்டுக்கல் மாநகரப் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் 75க்கும் மேற்பட்டோர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை
மதர் தெரசா லயன்ஸ் சங்க தலைவர் பிரபாகரன், நிர்வாக செயலாளர் சைலேந்திர ராய், செயல்பாடுகள் செயலாளர் மணிப்பாண்டி, பொருளாளர் கஷ்மீர் அருண், நிர்வாகி சாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *