கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்கள் இடையே 22 கி.மீ இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய மின்மய இரட்டை ரயில் பாதையில் தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா நேற்று ஆய்வு செய்தார். கடம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு ரயில் மூலமாக ஆய்வை துவக்கினார். வழியில் ரயில்வே கேட்டுகள், கடம்பூர் உபமின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரிய மின்தடை குறுக்கீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதன்மை மின் வழங்கல் பிரிவு பொறியாளர் சுந்தரேசன், மின் மயமாக்கல் பிரிவு பொது மேலாளர் ராமநாதன், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சு ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் புதிய இரட்டை ரயில் பாதையை இன்று புதன்கிழமை பெங்களூர் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்கிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *