மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த நிலவர அறிக்கையை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். புதுடெல்லி, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் மீதான இளம் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்யக்கோரி கடந்த மாதம் 23-ஆம் தேதியில் இருந்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த விசாரணையை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யவும் கோரி டெல்லி கோர்ட்டில் மல்யுத்த வீராங்கனைகள் தர்ப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த நிலவர அறிக்கையை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *