சிங்கபெருமாள்கோயில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பாக மாமேதை காரல்மார்க்ஸ் பிறந்தநாள் விழா, மே தின விழா, நிதியளிப்பு விழா என முப்பெரும் விழா சிங்கப்பெருமாள் கோவிலில் மாலை சுமார் 6 மணி அளவில் கட்சியின் காட்டாங்கொளத்தூர்- வண்டலூர் பகுதி செயலாளர். எஸ்.குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயற்குழு தோழர். கே.சேஷாத்திரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர். ஐ.ஆறுமுகநயினார், கட்சியின் மாவட்டச் செயலாளர். ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு தோழர்கள்: இ. சங்கர், வி.தமிழரசி ஆகியோர் அரசியல் விளக்கவுரையாற்றினார்கள்.

நிறைவாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர். கே.பாலகிருஷ்ணன் அவர்கள் மே தின வரலாற்றையும், காரல் மார்க்ஸ் பிறப்பு முதல் மூலதனம் வரை எடுத்துரைத்து தொழிலாளர்களின், உழைப்பாளி மக்களின் உழைப்பு சுரண்டலை எடுத்துரைத்து கார்ப்ரேட் முதலாளித்துவம், அந்நிய முதலாத்துவத்தை வேரறுத்து பொதுவுடைமை சமூகத்தை படைத்திடுவோம், எனச் சொல்லி அரசியல் விளக்கவுரையாற்றினார்.

மேலும் பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க தொடர் போராட்டங்களை நடத்திடுவோம், 2000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சாதிய ஏற்றதாழ்வுகளுக்கு முடிவுகட்டிட ஒரே சுடுகாட்டை உருவாக்கிட தொடர்ந்த போராடுவோம் பாசிச பிஜேபியை வீழ்த்திட களமாடிடுவோம் என சூளுத்தார்.
கட்சியின் மாவட்டக்குழு தோழர்.பி.சண்முகம் நன்றியுரையாற்றினார்.

கட்சியின் மாவடடச் செயற்குழு, இடைக்குழு செயலாளர்கள், மாவட்டக்குழு தோழர்கள் உள்பட கட்சியின் தோழர்கள் பெரும்திரளாக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *