வலங்கைமான்-பாபநாசம் சாலையில்
லாயம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு
குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள லாயம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள காரணமாக வலங்கைமான்-பாபநாசம்
சாலையில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன்பெறும் விதமாக கூட்டு குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத்திற்கு என கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர்
சாலைகளின் மையப்பகுதியில் குழாய் பதித்து கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் பைப்லைன் ஆனது பாபநாசம்-
குடவாசல் சாலை வழியாக வலங்கைமானுக்கு வந்து பின்னர் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் செல்லுகிறது. சாலையின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கங்களால் அவ்வப்போது கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டு பெரிய அளவில் தண்ணீர் வெளியேறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
வலங்கைமான்-பாபநாசம் சாலையில்மின்மாற்றி அலுவலகம் அருகில் இருந்து சந்திரசேகரபுரம் பூண்டி வரை
சுமார் 3கி.மீ.தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள லாயம்பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு மாதங்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு சாலையில் பெரிய அளவில் பள்ளங்களை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படும் வகையில் உள்ளது.
பல லட்ச ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட சாலை பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில்ஏற்பட்ட உடைப்பின் காரணமாக சாலை பழுதடைந்து உரிய பயன்பாட்டினை மக்களுக்கு அளிக்காமல் போனது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் வலங்கைமான் கோவிந்தக்குடி வழியாக செல்லும் நிலையில் தற்போது கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள லாயம் பகுதியில் இருச்சக்ர வாகனங்கள் கூடசெல்லுவது சிரமமாக உள்ளது,
எனவேமேலும் காலதாமதம் இன்றி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பின் சரி செய்ய வேண்டும் என
பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.