எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி CBSE பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி அடைந்து சாதனை புரிந்துள்ளனர். 2022 – 23 கல்வி ஆண்டில் CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசு வழங்கி பாராட்டுதல் விழா நடைபெற்றது.

இதில் பள்ளியின் தலைவர் K. சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற S.கோபிகா ஸ்ரீ (468), இரண்டாம் இடம் பெற்ற V.பூர்ணிகா(454), மூன்றாம் இடம் பெற்ற D.K.பிரணிகா(448) ஆகியோர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார் பள்ளியின் கல்வி இயக்குனர் P.சுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார்.

பள்ளியின் முதல்வர் S.மோகன் குமார் வந்திருந்த பெற்றோர்கள் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் R.மணிவண்ணன் நன்றி உரை வழங்கினார்.

இவ்விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *