பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டியை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தில் வழி தெரியாமல் திக்கற்று தனியாக பிரிந்து வந்த மான்குட்டி கிணற்றில் தவறி விழுந்தது இதனை வயலில் வேலை செய்து கொண்டு இருந்த விவசாயிகள் மான்குட்டி அலறும் சத்தத்தை கேட்டு தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மான்குட்டியை உயிருடன் மீட்டு அரியலூர் சரகம், ஆண்டிமடம் பகுதி வனக்காப்பாளர் தேவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *