வலங்கைமானில் பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் பேரணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வலங்கைமானில் பருவம் தவறி பெய்த மழையால் ஏக்கருக்கு ரூ 50ஆயிரம் செலவு செய்த பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் விளைச்சல் திறன் இழந்து காணப்படுகிறது.
ஆகவே பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் அருகில் இருந்து பேரணி புறப்பட்டு கடைவீதி வழியாக தாலூகா அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
பேரணிக்கு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார், திருவாரூர் மாவட்ட செயலாளர் செம்மங்குடி ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ண மணி, வலங்கைமான் ஒன்றிய தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.