பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு அதிகாரிகள் யாரும் இல்லாததால் எம்.எல்.ஏ. கோபம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பால பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

அப்போது அவரிடம் அங்கிருந்த பிரமுகர்களும், பொதுமக்களும் 20 நாட்களாக சரிந்து விழுந்த சாலை சரி செய்யப்படாமல் உள்ளதால் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறோம் என்று கூறினர்.

இது பற்றி விளக்கம் கேட்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாராவது இருக்கிறீர்களா என எம்.எல்.ஏ. கேட்டார். அப்போது அங்கு யாரும் இல்லை.
இதனால் கோபமடைந்த ஜவஹிருல்லா எம்.எல்.ஏ., 15 நாட்களாக சரிந்து விழுந்த சாலையை சரி செய்யாமல் உள்ளனர்.

இது பற்றி விளக்கம் சொல்வதற்கும் இங்கு அதிகாரிகள் இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
என்று கோபத்துடன் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *