சத்தியமங்கலம், தாளவாடி தாலுக்காவில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சத்தியமங்கலம் தாளவாடி தாலுகாவில் உள்ள 29 தனியார் பள்ளிகளை சேர்ந்த 156 பேருந்துகள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி மற்றும் போக்குவரத்து, காவல் மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். பேருந்துகளில் அவசர வழி கதவு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட அனைத்தும் சோதனை செய்யப்பட்டு சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.
மேலும் பேருந்துகளில் ஏற்படும் திடீர் தீ விபத்துகளை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். அனைத்து ஓட்டுனர்களுக்கும் கண் பரிசோதனையும் செய்யப்பட்டது.