தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக, விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்யக் கோரியும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடத்திட வலியுறுத்தியும், ஆசிரியர்கள் பதவி உயர்வுக்குத்தகுதித் தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுத்திட வலியுறுத்தியும், ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் எஞ்சிய மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்திட வலியுறுத்தியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வில் கூடுதல் தேவை பணியிடங்களை பணி மாறுதல் கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டியும், உபரி ஆசிரியர்களை வெளி ஒன்றியங்களுக்கு, வெளி மாவட்டங் களுக்கு பணி நிரவல் மாறுதலில் அனுப்பும் நிலை ஏற்பட்டால், தாய் ஒன்றியத்தில் பணியில் இளையோரையே பணி நிரவல் மாறுதலில் அனுப்ப வலியுறுத்தியும், ஒன்றியத்துக்குள் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்தி விட்டு அதன் பின்னர் இருக்கக்கூடிய காலி பணியிடங் களுக்கு ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களில் தகுதியான ஆசிரியர் களுக்கு பதவி உயர்வை வழங்கிவிட்டு மீதமுள்ள காலி பணியிடங் களுக்கு மட்டுமே வெளி ஒன்றியங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பணி மாறுதல்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் களை நியமிக்க வலியுறுத்தியும், தொகுப்பு ஊதிய முறையில் தற்காலிக பணி நியமனமாக இடைநிலை ஆசிரியர் களுக்கு ரூ12,000 எனவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ15,000 எனவும் அறிவிப்பு வெளியிட்டு பணி நியமனம் செய்யப்பட்ட ஆணைகளை ரத்து செய்து முறையான கால முறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் மதுரை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். நாளை திங்கட்கிழமை மதுரை ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
யிலும், திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலகத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட “தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டக்கிளை முடிவு செய்துள்ளது” என
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, மதுரை மாவட்டச் செயலாளர் பெ. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *