பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவைக்காவூர் ஊராட்சி கீழமாஞ்சேரி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி நீண்ட காலமாக பழுதடைந்து உள்ளதால்

கடந்த இரண்டு மாத காலமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவிலை.
இதனால் கீழமாஞ்சேரி தெற்கு தெரு, வடக்கு தெரு, மெயின் ரோடு, குடியானத் தெரு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குடிநீர் நீர்தேக்கத்தொட்டி சிதலமடைந்ததால் புதிய நீர்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை, சீரான குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100- க்கும் மேற்பட்டோர் கீழமாஞ்சேரி மெயின் ரோடு சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *