மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகமும் அரசு அருங்காட்சியமும் இணைந்து நடத்திய கோடைகால கலைப் பயிற்சியின் நிறைவு விழா காந்தி நினைவு அருங்காட்சியத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமையேற்று கோடைகால பயிற்சியில் பெற்ற பங்கு பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி தலைமை உரையாற்றினார்.
சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு தேசிய சின்னங்கள் மற்றும் மாநில சின்னங்கள் என்னும் தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் காந்தி நினைவு அருங்காட்சியக பொருளாளர் செந்தில்குமார் வழங்கினார்.
காந்தி நினைவு அருங் காட்சியக செயலாளர் நந்தாராவ் வரவேற்றார். காந்தி நினைவு அருங்காட்சிய காப்பாட்சியர் நடராஜன் முகாம் அறிக்கை வாசித்தார்.
அரசு அருங்காட்சியக் காப்பாட்சியர் மருது பாண்டியன் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் கோடைகால கலை பயிற்சி மாணவ மாணவியரின் நாட்டுப்புற கலை, யோகா, கராத்தே, சிலம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் காந்தி நினைவு அருங்காட்சியக நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மாணவ மாணவியர் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.