மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழமையான, பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு திருமறைநாதர் வேதநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது ,இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பெருவிழாவின் கடந்த பத்து நாட்களாக நடைபெறும் நிலையில் நேற்று திருமறைநாதர் வேதநாயகிக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது .

சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருமறைநாதர் பிரியாவிடை தாயார் மற்றும் வேதநாயகியம்மன் உள்ளிட்டோருடன் வீதி உலா வரும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் மதுரை சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 10,000, க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *