தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் கடந்த மே 12 முதல் மே 20 வரை நடைபெற்ற ‘ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில் தென் கொரியா சியோல் நகரில் இருந்து டெல்லி வந்து டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்பொழுது பேசிய அவர் ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் கேம்ஸ் 2023 நடைபெற்றது இந்த போட்டியில் 56 நாடுகளில் இருந்து 12500 வீரர்கள் பங்கேற்றனர் மேலும் இந்தியாவிலிருந்து 35 பேர் கலந்து கொண்டனர் அதில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த நான் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பலு தூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டேன் அதில் 102 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றேன் என்றார்.

மேலும் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார் அதில் விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் சாதிக்க வேண்டுமென்றால் அரசு உதவி செய்தால் இதுபோல பல பதக்கங்களை வென்று இந்தியாவின் சார்பில் சாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *