மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்
சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட நுகும்பல் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மணிமாறன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கள்ளச்சாராயம் மற்றும் மதுவை அறவே ஒழிக்க வேண்டும் என
கையில் பதாகைகள் ஏந்தி அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில் பீடி சிகரெட் குட்கா உள்ளிட்டவர்களை கிராமத்தில் பயன்படுத்தக் கூடாது என நுகும்பல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மணிமாறன் கூறுகையில் எங்கள் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் ஏதும் பயனில்லை மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.