வலங்கைமான் மே 6 வலங்கைமான் அடுத்த அன்னுகுடி ஊராட்சி உத்தாணி ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு. வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அன்னுகுடி ஊராட்சி உத்தாணி
ரயில்வே கேட் பகுதியில் நிறைத்த தாடியுடன் பறுத்த உடம்புடன் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வலங்கைமான் காவல்துறையினர்
முதியவர் சடலத்தை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் இறந்து போன முதியவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. அதனை அடுத்து தற்போது சடலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *