நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூணு சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆவுடையார் திருக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ நந்தி பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களான பால்,தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதேபோல் ஸ்ரீ ஆவுடையார் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ நந்தி பகவானுக்கும் ஆவுடையார் சாமிக்கும் மகாதீபாரணை காட்டப்பட்டது.

பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *