நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர் உயர்திரு மாணிக்கம் அவர்கள் பணி நிறைவு நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்ந்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் என அனைவரும் அவரது சேவையை பாராட்டியும் பணியின் போது அவர் ஆற்றிய சிறப்பான பல செயல்களுக்கு அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.
அதன்படி ராசிபுரம் புதுப்பாளையம் சாலை எல்லை மாரியம்மன் கோவில் அருகே உள்ள சசிகலா அணியைச் சேர்ந்த என். கோபால் அவர்கள் அலுவலகத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு அவரது பணி நிறைவு விழாவை முன்னிட்டு அவருக்கு மாலை, மற்றும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
மேலும் இதில் பேசிய என். கோபால், சமூக பற்றுள்ள ஒரு சிறந்த மனிதர் காவல் உதவி ஆய்வாளர் திரு. மாணிக்கம், அவர்கள் ராசிபுரத்தில் பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அனைவரிடத்திலும் அன்பு காட்டக்கூடிய ஒரு சிறந்த மனிதர் ஆவார் என புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்வில் K.N. கோபால், V.இராமசெழியன் R.N. சந்திரசேகர், இன்ஜினியர், N. குமார், M. முனியப்பன், S. மும்மூர்த்தி, K. ஆறுமுகம்,S. கந்தன், K. சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..