தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆப்தின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியின் முன்னதாக பட்டம் பெரும் குழந்தைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்று விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து நிர்வாக குழு இயக்குனர் சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி சிவக்குமார் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அறிமுக உரையாற்றினார். ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யுகேஜி லிருந்து ஒன்றாம் வகுப்பு செல்லும் 40 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

பள்ளி தாளாளர் ஜெயந்தி சித்தார்த்தன், பள்ளி நிர்வாகக் குழு இயக்குனர் ஹாஜாமைதீன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பூபதிராஜா ஆகியவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். ரொட்டேரியன் பக்ருதீன்,ராஜா பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை கற்பக செல்வி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *