கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நகரின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வெங்கடாசலம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்