கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வொப்பலம் பட்டி ஊராட்சி மேச்சேரி கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவரது மனைவி மங்கையர்கரசி (38). இவர்களுக்கு மெய்யரசி (16), பூவிதா (11), ரூபேஷ் (3) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அண்ணாமலை சென்னை உள்ளிட்ட பல்வேறு ஓட்டல்களில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பார்வையை இழந்துள்ளார்.

கண் மருத்தவர்களை பரிசோதித்ததில் மூளையிலிருந்து கண்ணுக்கு செல்லக்கூடிய நரம்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பார்வை இழந்துள்ளதாகவும், மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பிள்ளை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத்தின் ஒரே பாதுகாவலனுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அதிர்ந்தது அந்த குடும்பம். இதில் மனம் உடைந்த அண்ணாமலையின் மனைவி மங்கர்கரசி, பார்வை கிடைக்க அவருக்கிருந்த 1 ஏக்கர் நிலத்தையும் விற்று, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றும் பயனில்லாமல் மனம் வேதனையில் கடந்த 2022ம் ஆண்டு நோய்வாய்பட்டு உயிரிழந்தார்.

மெய் அரசி. தாயில்லாமலும், பார்வையிழந்த தந்தையை வைத்துக்கொண்டு மூன்று பிள்ளைகளும் குடும்பத்தை நடத்த முடியாமல் வாடி வந்த நிலையில், இதனை அறிந்த திருப்பத்தூரை சேர்ந்த ஹெல்பிங் ஹேன்ட் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் கிஷோர்பிரசாந்த் மற்றும் அவரது மனைவி ரங்கநாயகி ஆகிய இருவரும் நேரில் வந்து அவர்களுக்கு தேவையான அரசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், பாய் மற்றும் பெட்சீட், இரண்டு மாணவிகளுக்கும் தேவையான நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மேலும் ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

கணவன் மனைவி இருவரும் ஹெல்பிங் ஹேன்ட் டிரஸ்ட் மூலம் ஏழை எளியோரை தேடி அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *