கோவையில் ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கராத்தே பயிற்சி நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது…

ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கோவை மேற்கு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக கராத்தே பயிற்சி நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு கலர் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

காளம்பாளையம் பகுதியில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக, ஹயாசி- ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா தலைமை பேராசிரியர் மற்றும் தேர்வாளர் ஷிகான்,வி.எம்.சி.மனோகரன் கலந்து கொண்டு பல்வேறு நிலைகளை முடித்த மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பச்சை , நீளம் , பிரவுன் உள்ளிட்ட வண்ண பட்டயங்களை வழங்கினார்..இதில் சென்சாய் சதீஷ்,செல்வம்,மூர்த்தி, செந்தில்,ஆரோக்கியராஜ், சேகர், ஆகிய பயிற்சியாளர்களின் 153 மாணவ,மாணவிகளுக்கு பட்டயங்கள் வழங்கப்பட்டது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *