வலங்கைமான் அருகில் உள்ள திருவாஞ்சியம் பகுதியில் பழுதடைந்து காணப்படும் கால்நடை மருத்துவமனை, அச்சத்துடன் பணியாற்றும் பணியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா?.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் பகுதியில் கால்நடை மருத்துவமனை சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடம்பழுதடைந்துள்ள நிலையில் பாம்பு, பல்லி,
பூச்சி முதலானவை வந்துசெல்லும் ஒரு இடமாகவும் உள்ளது. மேலும் தற்போது வரைமின்சார வசதி கூட இல்லாமல் இந்த கட்டிடம் உள்ளது. இங்கு கால்நடை மருத்துவர் வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே
வருவதாகவும் இப்பகுதிகால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அங்கு பணிபுரியும் உதவியாளர்விடுமுறையே எடுக்காமல் பணி செய்வதாக தெரிகிறது. அவரும் பயந்து, பயந்து அச்சத்துடன் பணியாற்றும் சூழல் தான் உள்ளது. அந்த அளவிற்கு அந்த கட்டிடம் பழுதடைந்து பாம்பு, பல்லி , பூச்சிகள் வந்து செல்லும் புகலிடமாக இருக்கிறது.
அவசர சிகிச்சைக்கு வருகின்ற கால்நடைகளை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு மருத்துவமனையில் தான் மோசமான நிலையில் உள்ளது என்றால் கால்நடை மருத்துவமனைகளும் அதே நிலையில் தான் உள்ளது என்பது வேதனையளிக்கிறது.
எனவே தமிழக அரசு இந்த கால்நடை மருத்துவமனையை சீரமைத்து, அடிப்படை வசதிகள், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிஅனைத்து நாட்களும் மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.