பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே இராமச்சந்திரபுரம் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீ திரௌபதி அம்மன்,மாணிக்க நாச்சியார்ஆலய பாலாலயம்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், இராமானுஜபுரம் ஊராட்சி, இராமச்சந்திரபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பால விநாயகர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ மாணிக்க நாச்சியார் கோயில்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தற்போது இக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் முடிவு செய்தனர் அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற உள்ளதை அடுத்து கோவில் வளாகத்தில்,விக்னேஸ்வரபூஜை, புண்ணியாக வசனம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்று.
பாலாலயம் அமைத்து,பாலாலய யாக பூஜைகள் நடைபெற்றுது.
அதனைத் தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி கிராமவாசிகள் ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை இராமச்சந்திரபுரம், கிராமவாசிகள் விழா குழுவினர் செய்திருந்தனர்.