சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சதுமுகை ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ் தலைமையில், ஒன்றிய அவைத்தலைவர் சேகர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தலைமைக் கழக பேச்சாளர் கரூர்.முரளி முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் கொம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், சத்தி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ, மாநில விவசாய அணி இணை செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய துணை செயலாளர்கள் பெரியசாமி, சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி ஆறுச்சாமி, சதுமுகை செல்வராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள்,கழக சார்பு அணிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இளைஞர் அணி அமைப்பாளர் நவின்குமார் நன்றியுரையாற்றினார்.