கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜூலை 13,14-ம் தேதிகளில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் நடைபெறும் நகரத்தை மாற்ற திமுக கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேகதாது பிரச்சினையால் பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க திமுக தயக்கம் காட்டிய நிலையில் கூட்டம் ரத்தாகியுள்ளது. மேலும் மராட்டிய அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு காரணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள ஆலோசனை கூட்டம் வேறு தேதிகளில் நடைபெறும் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா அல்லது ஜெய்ப்பூரில் தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *