பெருங்குளம் பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
பெருங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் புவனேஸ்வரி சண்முகநாதன் கலந்து கொண்டு, பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு கரும்பு மற்றும் இனிப்பு வழங்கினார். பேரூராட்சி செயலாளர் சந்திரசேகரன், அதிமுக நகர செயலாளர் மற்றும் கவுன்சிலர் வேதமாணிக்கம், கவுன்சிலர்கள் பாஸ்கர், காமராஜ், செல்வகுமாரி பட்டுப்பாண்டி, சுப்பிரமணியன், வத்சலா மாணிக்கம், பொன் செல்வராஜ், ஐஸ்வர்யா, சண்முகத்தாய் செல்லப்பா, மாயன், சத்யா, கண்ணம்மா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.