பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே ஸ்ரீ முத்து முனியாண்டவர் ஆலய 51 -ஆம் ஆண்டு பால்குட திருவிழா

திரளான பக்தர்கள் முளைப்பாரி , பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி மெயின்ரோட்டில் அமைந்துள்ள முத்து முனியாண்டவர் ஆலய பால்குட திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சண்டி மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் பால்குடம் , காவடி , திரளான பெண்கள் முளைபாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து ஸ்ரீ முத்து முனியாண்டவர், கன்னி மூல கணபதி, தர்ம சாஸ்தா ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி, பால்குடம் , அலகு காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *