கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்ட விநாயகர் சதூர்த்தி ஆலோசனைக்கூட்டம் இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஏ.எஸ்.டி.சேகர்தலைமையில் கோவை தெற்கு மாவட்ட கோட்டச்செயலாளர் பாலச்சந்தர் முன்னிலையில் வால்பாறையிலுள்ள துளசியம்மாள் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது இந்த ஆலோசனைக்கூட்டத்ததிற்கு இந்து முன்னணியின் மாநிலச்செயலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார்

அப்போது செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி அன்று சுமார் 108 இடங்களில் 108 சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளதாகவும் அதற்க்கான ஆலோசனைகளையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியின் போது இந்து முன்னணியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *