வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி வாழகட்டை தோப்பு பத்ரகாளியம்மன் ஆலய த்தில் 6-ஆம் ஆண்டு ஆடி
திருவிழா நடைப் பெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி வாழகட்டை தோப்பு பத்ரகாளியம்மன் ஆலய த்தில் வருடந்தோறும் ஆடி மாதம் ஆடி திருவிழா நடைப்பெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு (30-ந்தேதி)
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குடமுருட்டி ஆற்றாங்கரையில் இருந்து அம்பாளுக்கு பால் குடம், காவடி புறப்பட்டு மதியம் 12மணிய ளவில் அம்பாளுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 4மணியளவில் சிறப்பு தப்பாட்டத்தோடு அம்பாள் வீதியுலா காட்சியும் சிறப்பு அதிரடி வானவேடிக்கை நடைப்பெற்றது.( 31-ந்தேதி) திங்கட்கிழமை காலை 10மணி அளவில் அம்பாள் வீதியுலா காட்சியுடன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 10மணி அளவில் விடையாற்றி மற்றும் அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மேலப்பூண்டி கிராமவாசிகள் சிறப்பாக
செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *