எஸ். செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழியில் குறுவட்ட அளவில் தடகளப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்து பரிசுகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மேலச்சாலை அரசு உயர்நிலைப்பள்ளி ஏற்று நடத்தும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சீர்காழி குறுவட்ட தடகளப் போட்டிகள் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (தனியார்) விளையாட்டு மைதானத்தில் இன்றும் நாளையும் என இரு தினங்கள் நடைபெறும் போட்டிகளை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 57க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
ஆண் பெண் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களையும்,பாரட்டு சான்றிதழ்களையும் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கி பாராட்டினர்.இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அம்பேத்கார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முதலுதவிக்காக 108 வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.