ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ மேற்கொண்டார்கள்.
குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பண்ணையூர் நெடுஞ்சேரி, நாரணமங்கலம், திருவிடைச்சேரி ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து சிறப்பாய்வினை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்கள்.
முன்னதாக, திருவிடைச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துகளின் இருப்பு விவரம், அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திடுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆய்வில் குடவாசல் வட்டாட்சியர் .தேவகி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர் சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர் உடனிருந்தனர்