மனவெளி தொகுதிக்கு உட்பட்ட, ,டோல்கேட் பகுதியில் உள்ள பல்லவன் வீதியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக, ரூபாய் 30 லட்சத்து 42,ஆயிரம் மதிப்பீடு செய்து அப்பணியை தொடங்குவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலையில், மனவெளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான, ஏம்பலம் செல்வம் தலைமையேற்று, பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் அகிலன், சரஸ்வதி, சுரேஷ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் எஸ்விஎஸ் குமரன், ரமேஷ், சேகர், மூர்த்தி, வேலாயுதம், ஆனந்த், சபரிஉள்ளிட்ட பலர். கலந்து கொண்டனர்.