புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் மற்றும் புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பாக கந்து வட்டி போல் கடனை வசூல் செய்வது மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகள் போல் தொலைபேசியில் கடனாளிகளை மிரட்டுவது போன்ற நடவடிகளில் ஈடுபட்டு வரும் பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்
உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் – நிறுவனத் தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையிலும் மற்றும் புதுச்சேரி மாநில பொது நல அமைப்பு தலைவர்களின் தலைமையிலும் 30.04.2024… செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் செட்டி வீதி ( காந்தி வீதி – மிஷன் வீதி ) இடைப்பட்ட பகுதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை கண்டித்து போராடும் நடைபெற உள்ளது
என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதில் நாம் மனித மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த போராட்ட குணம் கொண்ட அன்பு நெஞ்சங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்