மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தகவல்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டிய சகோதரர்கள் 222வது நினைவு தினம் நாளை திருப்பத்தூரில் அரசு விழாவாக கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு, ஆட்சியர், தமிழக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய மக்களும் அஞ்சலி செலுத்த வரும் நிலையில் அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாட்டினை சிவகங்கை மாவட்ட காவல்துறை மேற்கொண்டுள்ளதாக கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் அன்றைய தினம் குயிலியின் நினைவு தினம் சிவகங்கையில் உள்ள அவரது நினைவு ஸ்தூபியில் நடைபெற உள்ளதால் சமுதாயத் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் 1600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் காளையார் கோவிலில் வரும் 27 ஆம் தேதி சமுதாய மக்களால் மருது சகோதரர்களின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதால் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபட உள்ளதாகவும், அஞ்சலி செலுத்து வருபவர்கள், அனுமதி பெற்ற வாகனங்களில், உரிய வழிமுறைகளை பின்பற்றி வருமாறு காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.