மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

மன்னார்குடியில் உள்ள மருதுபாண்டியர்களின் திருஉருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் .ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

சுதந்திரப் போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 222 வது நினைவு தினதத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பந்தலடியில் உள்ள மருதுபாண்டியர்களின் திருஉருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் .ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இதில் கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் ,ஒன்றியச்செயலர் தமிழ்ச்செல்வம், ஒன்றியக்குழுத் தலைவர் டி.மனோகரன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் நகர , ஒன்றிய பொருப்பாளர்கள் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகி அ.புவனேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *