தேவர் குருபூஜைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்று திருப்புவனம் பகுதியில் பாரத பிரதமர் எடப்பாடியாரே என புகழ்பாடும் சுவரொட்டியால் பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அதிமுக சார்பில் வரும் 30 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவிற்க அஞ்சலி செலுத்த வரும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சிறு நரியின் சலசலப்பிற்கு சேலத்து சிங்கம் அஞ்சுவதில்லை என்றும் அல்லு சில்லறைக்கு எல்லாம் அஞ்சாமல் பசும்பொன் வருகை தரும் அஞ்சா நெஞ்சர் என்றும், பரிவட்டம் சூட்டி வரவேற்கிறோம், வரேன்னு சொன்னாலே பசும்பொன்னே அதிருதில்ல என்பதுடன் பாரத பிரதமர் எடப்பாடியார் என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழ்பாடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். எனினும் இது ஓபிஎஸ் அணியினரை சீண்டும் விதமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக ஓபிஎஸ் அணியினர் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள் என்பதால், போஸ்டர் யுத்தம் எங்கு போய் முடியுமோ என்ற பதற்றம் நிலவுகிறது.