பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ள வேண்டும்..
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் திருக்கருக்காவூரில் நடைபெற்ற உள்ளாட்சி தின கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருக்கருகாவூரில் உள்ளாட்சி தின கிராம சபா கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மாவட்டம் தோறும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ள வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே வாய்க்காலில் உள்ள அடைப்புகளை நீக்கி ஏரிகள், பாசன ஏரிகள், குளம் குட்டைகள், போன்றவற்றில் தேவையான மணல் மூட்டைகள் சவுக்கு கட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்து, மழை நீர் வழிந்து ஓடுவதற்கான வகைகளை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள் அங்கன்வாடி மையங்கள் அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வினிகம் செய்வதை உறுதிப்படுத்திட வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் உள்ளாட்சி தின கிராம சபா கூட்டத்தில், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இளைஞர் மன்றத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.