தஞ்சையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் குடவாசல் மாணவி முதலிடம்.

தஞ்சையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் குடவாசல் பள்ளி மாணவி முதலிடம் பெற்றார். டெல்டா டிராபிஸ் தமிழ்நாடு மாநில அளவிலான ஓபன் மற்றும் குழந்தைகள் செஸ் போட்டி-2023 மாவட்ட சதுரங்க சங்கத்தின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தஞ்சாவூரில் நடைபெற்றது.

டான்சிங் டால் ஈவென்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் தஞ்சாவூரில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள அரசு உதவி பெறும் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தருணிகா கலந்து கொண்டார்.

இதில் 6 சுற்றுகள் கொண்ட ஆட்டத்தில் 5 சுற்றுகளில் மாணவி தருணிகா வென்று முதலிடம் பெற்றார், இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முதலிடம் பெற்ற மாணவி தருணிகாவை பாராட்டி பரிசு, பதக்கம் வழங்கினார். மாணவி தருணிகா ஏற்கனவே தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக திருவாரூர், நாகை, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்கள் பெற்றும் வெற்றி சான்றிதழ், கோப்பைகள் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது தஞ்சாவூரில் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்று முதலிடம் வென்றதால் மாநில அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *