பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் பகுதிகளில் செயல்படும் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களை தீயணைப்புத் துறையினர் ஆய்வு…

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசு இடத்தினை பாபநாசம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் உதவி நிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பட்டாசு உற்பத்தி செய்யும் இடம் அருகே மின்மாற்றி, பெட்ரோல் பங்க் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் சாதனங்கள் அருகே உள்ளதா என வும் , காப்பர் பிளேட் பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பட்டாசு தயார் செய்யும் இடத்தில் பட்டாசுகள் இருப்பு வைக்கும் இடம் மற்றும் தயாரிப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா? தண்ணீர் வாலிகளில் உள்ளதா, கடைகளுக்கு 2 வழி, தீயணைப்பு கருவி உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *