கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ்
அறிஞர் அண்ணா கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அடோப் விசுவல் டிசைன் பற்றிய சிறப்பு பயிற்சி
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்த் துறை மற்றும் ஆங்கிலத்துறை மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு அடோப் விசுவல் டிசைன் பாடநெறி குறித்த நான்கு நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆங்கிலத்துறை பேராசிரியர் திரு ரா.சரவணகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் பேசுகையில் திட்ட வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் தொடர்பு, மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களின் படைப்பு திறன்களை வெளி கொண்டுவர இந்த அடோப் விசுவல் டிசைன் பயிற்சி மிகவும் இன்றி அமையாததாக அமையும் என்று கூறினார்.
பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்வி. சவுந்தர்யா அவர்கள் நான்கு நாட்கள் மாணவர்களுக்கு அடோப் விசுவல் டிசைன் துறையில் இருக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரியின் நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ரா. வெங்கடேஷ் குமார் அவர்கள் நன்றியுரை கூறினார். இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.