பாளேத்தோட்டம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி : பாளேத்தோட்டம் அரசு பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் கிராமத்தில் சுகாதார துறையினர் மற்றும் பாளேத்தோட்டம் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பாளேத்தோட்டம் அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியானது ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக ஊரின் முக்கிய தெருக்களில் 100க்கும் மேற்ப்பட்ட பேண்டு வாத்தியம் முழங்க ஓம்சக்தி நாடக கலைஞர்கள் தத்ரூபமாக டெங்கு குறித்த வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடனமாடி விளக்கம் அளித்தனர்.

மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இப்பேரணியை பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் இப்பேரணியில் சந்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மருத்துவ அலுவலர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் கந்தவேல், ராஜேஷ்குமார், கிருபாகரன், கிராம சுகாதார செவிலியர் மீனாட்சி, அம்பிகா, சென்னம்மாள், ஓலா அறக்கட்டளை கவிதா மற்றும் பாளேத்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் விமலாவேலாயுதம், துணை தலைவர் சரஸ்வதிகோபி, ஊராட்சி குழு கவுன்சிலர் எல்லப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்பத், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சுதந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் அன்பு, மற்றும் அபிராமி, மற்றும் சுகாதார துறையினர், பள்ளி மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பெற்றோர் நாடக கலைஞர்கள், இசை கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *