அரசு நடுநிலைப் பள்ளியில் நாடகத் திருவிழா….

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றிய எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நாடகத் திருவிழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அமெரிக்கன் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் பிரபாகர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார்.

தேசிய நாடக பள்ளியும் கலைடாஸ்கோப் மையமும் இணைந்து
மதுரை பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை ,மக்களோடு மக்களாக இருந்த ,எளிய பிரபலமில்லாத உள்ளூர் தியாகிகள் மாயாண்டி பாரதி, சொர்ணத்தம்மாள் இருவரின் வாழ்க்கையிலிருந்து சிறுபகுதிகளை ஒளி ஒலி உதவியுடன் குறு நாடகமாக நிகழ்த்தி காட்டினர்.

நாடக முடிவில் ஆசிரியை சித்ரா, மாணவி கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் அருவகம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்செல்வி, அகிலா, அம்பிகா, சாந்தி, அனிதா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *