கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ்

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டியில் சாதனை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போல் பள்ளியில்  உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தமிழ்த்துறை மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றார்கள் இதில்

காவியா, சந்தியா,
பார்வதி, திரிஷா நளினி, பஜிலத் உளியோசை இதழில் ஆணாக நான் இருந்தால் என்னும் தலைப்பிலும் விக்னேஷ்,
நவாஸ்,
சுகேல் உள்ளிட்டோர் பெண்ணாக நான் இருந்தால் என்னும் தலைப்பிலும் உளியோசை இதழில் கவிதைகள் எழுதி சிறப்படைந்தனர். மிகச் சிறப்பாக கவிதை எழுதிய மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து மேலும் பல படைப்பாற்றல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தன்னம்பிக்கை
ஊட்டினார். சிறப்பாக கவிதை எழுதிய மாணவ மாணவியர்களை உளியோசை இதழ் ஆசிரியர் ராம் கணேஷ் துணை ஆசிரியர் மற்றும் கல்லூரியின் தமிழ்த் துறை உதவி பேராசிரியை செ. காயத்ரி ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் சி . செல்வக்குமார் மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் ப.சுரேஷ்குமார் அவர்கள் மாணவ மாணவியர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கு நெறியாளராக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *