ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் நகர ஒன்றிய தேமுதிக சார்பில் நிறுவனத் தலைவர் கேப்டன் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்

திருவாரூர் நகர ஒன்றிய தேமுதிக சார்பில் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருவாரூர் நகருக்கு உட்பட்ட கீழ வீதியில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் கோவிலில் முருகப்பெருமானுக்கு யாகம் வளர்த்து திரவிய புடி மா பொடி சந்தனம் பன்னீர் பால் தயிர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து முருகப்பெருமானுக்கு அலங்காரம் செய்து வழிபட்டனர்

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள தேரடி விநாயகர் கோவில் சன்னிதானத்தில் அர்ச்சனை செய்து தேங்காய் சிதறுக்காய் உடைத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர் நிகழ்விற்கு தேமுதிக திருவாரூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஜி சதீஷ்குமார் ஒன்றிய கழக செயலாளர் வி அருள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது நகர அவைத் தலைவர் எஸ் கார்த்திகேயன் பொருளாளர் முத்து நகரத் துணைச் செயலாளர்கள் எம் சிவா கே பிரகாஷ் சி செல்லப்பாண்டி நகர இளைஞரணி செயலாளர்கள் எஸ்டி ராஜா திருமுருகன் நகர கேப்டன் மன்ற செயலாளர்கள் டி ராஜா மீனாட்சி சுந்தரம் மாவட்ட பிரதிநிதிகள் பி மனோகர் ஜே பரமேஸ்வரன் இ செல்வகுமார் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி விஜயபாலன் இணையதள பொறுப்பாளர் மாலிக் அன்சாரி உள்ளிட்ட நகர ஒன்றிய கிளைக் கழக வட்டக் கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் சார்பு அணி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *