அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெறும் வெல்லும் சானாநாயகம் மாநாடு குறித்தும் அலங்காநல்லூர் பேரூராட்சி புரட்சியாளர் அம்பேத்கர் பேருந்து நிலையம் சீரமைக்க வலியுறுத்தியும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு சோழவந்தான் தொகுதி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை அமைப்பாளர் மணிமொழியன், தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார் அதிவீரபாண்டியன், காமராசு, வடகல்பூமி, அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்டச் செயலாளர் சிந்தனைவளவன், விளக்க உரையாற்றினார் இதில் மாநில துணை செயலாளர் செல்ல பாண்டியன், மற்றும் மாலன், கலைவாணன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் தமிழ்குமரன், நன்றி கூறினார்.