மன்னார்குடியில் விளையாட்டு மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்ட டாரஸ் லாரியை மர்மநபர்கள் திருடி சென்றனர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேசம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி உள்ளது லாரியை நேற்று இரவு வ.ஊ.சி சாலையில் உள்ள பின்லே பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் காலையில் வந்து டாரஸ் லாரியை பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கபட்ட டாரஸ் லாரியை காணவில்லை என அதிர்ச்சியடைந்தார்.

லாரியை மன்னாா்குடி முழுவதும் நண்பர்களுடன் சென்று தேடியும் லாரி கிடைக்கவில்லை .இதுகுறித்து லாரியின் உரிமையாளர் சரவணன் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேஸ்கண்ணா உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கோமிராவில் லாரியை திருடி சென்றது பதிவாகியுள்ளதா என பார்வையிட்டு வருகின்றனர்.

மன்னார்குடியில் விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *