எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி.
சீர்காழி காவல் நிலையத்தில் உள்ள முனீஸ்வரர் ஆலயத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா , பாரம்பரிய உடை அணிந்து காவலர்கள் கொண்டாட்டம் :
நாடு முழுவதும் தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழா சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் விவசாயம் செழிப்பதற்கும் தமிழர்களின் திருநாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது, இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் உள்ள காவல் முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது,
இந்த விழாவில் மத வேறுபாடு இன்றி இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் முறைப்படி பிராத்தனை செய்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர், இதனை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு சிறப்பு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்ச்சியின் போது சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரியமான உடையான வேட்டி சட்டையை ஒரேவிதமாக அணிந்து, பொங்களோ பொங்கள் முழக்கமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
இதில் சீர்காழி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர்கள் அசோக் குமார், சீனிவாசன், வினோபா, செந்தில் , பாலசுந்தரம், கல்யாணசுந்தரம், நடராஜன், ராஜாஜி,காவல் நிலைய எழுத்தர் குலோத்துங்கன் உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.